பாங்காக்கில் இருந்து மெல்போர்ன் நோக்கி பயணித்த ஜெட்ஸ்டார் விமானத்தில் மின் கோளாறு கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதன்போது பயணிகள் சுமார் 7 மணிநேரம் விமானத்திற்குள்ளேயே சிக்கிக்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜேட்ஸ்டார் விமானம் இன்று காலை 7.30 மணியளவில் பாங்காக்கில் இருந்து மெல்போர்ன் நோக்கி பயணித்தது. விமானம் டார்மாக்கில் இருந்தபோது மின்கோளாறு ஏற்பட்டமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அதனை சரிசெய்வதற்கு சிட்னியில் இருந்து ஒரு மாற்றுபாகம் கொண்டுவரப்பட வேண்டும் என விமானத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விமானம் பழுதுபார்க்கப்படும் வரை பயணிகள் ஏறக்குறை ஏழு மணி நேரம் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விமானத்தின் ஏர் கண்டிஷனிங் பாதிக்கப்பட்டதாக பயணி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மின் கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் SamugamMedia பாங்காக்கில் இருந்து மெல்போர்ன் நோக்கி பயணித்த ஜெட்ஸ்டார் விமானத்தில் மின் கோளாறு கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன்போது பயணிகள் சுமார் 7 மணிநேரம் விமானத்திற்குள்ளேயே சிக்கிக்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜேட்ஸ்டார் விமானம் இன்று காலை 7.30 மணியளவில் பாங்காக்கில் இருந்து மெல்போர்ன் நோக்கி பயணித்தது. விமானம் டார்மாக்கில் இருந்தபோது மின்கோளாறு ஏற்பட்டமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து அதனை சரிசெய்வதற்கு சிட்னியில் இருந்து ஒரு மாற்றுபாகம் கொண்டுவரப்பட வேண்டும் என விமானத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், விமானம் பழுதுபார்க்கப்படும் வரை பயணிகள் ஏறக்குறை ஏழு மணி நேரம் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விமானத்தின் ஏர் கண்டிஷனிங் பாதிக்கப்பட்டதாக பயணி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.