மாநாடு ஒன்றுக்காக வெளிநாடு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச பொலிஸ் சங்கத்தின் மாநாடு ஒன்றுக்காக பிரித்தானியா சென்ற நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு நாடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நால்வரும் பணியை கைவிட்டுச் சென்றதாக தீர்மானித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டுக்காக ஆறு பேரைக் கொண்ட குழுவொன்று பிரித்தானியா சென்றுள்ளது. எனினும் இதில் இரண்டு பேர் மட்டுமே நாடு திரும்பியுள்ளனர்.
பொலிஸ் விளையாட்டுப் பிரிவில் கடமையாற்றி வரும் இரண்டு கான்ஸ்டபிள்கள் மற்றும் இரண்டு சார்ஜன்ட்கள் இவ்வாறு நாடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு நாடு திரும்பாத சிலர் அரசாங்கத்தின் ஐந்தாண்டு கால விடுமுறையை கோரியுள்ளனர்.
எனினும் இந்தக் கோரிக்கைக்கு இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாடு ஒன்றுக்காக பிரித்தானியா சென்று நாடு திரும்பாத பொலிஸ் உத்தியோகத்தர்கள் samugammedia மாநாடு ஒன்றுக்காக வெளிநாடு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.சர்வதேச பொலிஸ் சங்கத்தின் மாநாடு ஒன்றுக்காக பிரித்தானியா சென்ற நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு நாடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.இந்த நால்வரும் பணியை கைவிட்டுச் சென்றதாக தீர்மானித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த மாநாட்டுக்காக ஆறு பேரைக் கொண்ட குழுவொன்று பிரித்தானியா சென்றுள்ளது. எனினும் இதில் இரண்டு பேர் மட்டுமே நாடு திரும்பியுள்ளனர்.பொலிஸ் விளையாட்டுப் பிரிவில் கடமையாற்றி வரும் இரண்டு கான்ஸ்டபிள்கள் மற்றும் இரண்டு சார்ஜன்ட்கள் இவ்வாறு நாடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு நாடு திரும்பாத சிலர் அரசாங்கத்தின் ஐந்தாண்டு கால விடுமுறையை கோரியுள்ளனர்.எனினும் இந்தக் கோரிக்கைக்கு இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.