வட்டுக்கோட்டை தமிரசு கட்சி அலுவலகத்தில் 2023ஆம் ஆண்டிற்கான பொங்கல் நிகழ்வு வட்டுக்கோட்டை தொகுதி தமிழரசுக்கட்சி தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக அலுவலக முன்றலில் சம்பிரதாயபூர்வ பொங்கல் நிகழ்வு இடம்பெற்று தொடர்ச்சியாக ஈஸ்வரபாதம் சரணனபணவன் அறக்கட்டளை அரங்கில் பொங்கல் சார் கலை நிகழ்வுகள் உதயவாழ்வு தையல் கற்கை மாணவர்கள் மற்றும் சூரிய கற்கைகள் சிங்கள நிறுவன மாணவிகளால் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன்,உதய வாழ்வு நிறுவன தலைவர் யசோதா சரவணபவன்,வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜெயந்தன்,உதய வாழ்வு தையல் பயிற்சி நெறி ஆசிரியர் மாணவர்கள், இலவச சிங்கள கற்கை நெறி மாணவர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.