இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளார்.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) துபாயில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த இந்த சந்திப்பின் போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மேற்கு வங்கத்துக்கு வருகைதருமாறு அழைப்பு விடுத்தார்.
அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஓவியம் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார்.