• May 03 2024

நீர் கட்டணத்திற்கு விலைச்சூத்திரம்..! தனியார்மயமாக்கும் எண்ணம் இல்லை! அமைச்சர் அறிவிப்பு...! samugammedia

Chithra / Nov 28th 2023, 12:39 pm
image

Advertisement

 

நீர் கட்டணத்திற்கான சூத்திரத்தை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் நேற்று (27) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், தண்ணீரின் தரத்தைப் பாதுகாக்கவும், செலவைக் குறைக்கவும் அரசு-தனியார் கூட்டாண்மையை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், தண்ணீரை விற்கும் அல்லது தனியார்மயமாக்கும் எண்ணம் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

உத்தேச நீர் கட்டண சூத்திரத்தின் இறுதி வரைவு டிசம்பரில் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகளுக்கு நியாயமான விலையில் தண்ணீர் வழங்கப்படும் என்றார்.


நீர் கட்டணத்திற்கு விலைச்சூத்திரம். தனியார்மயமாக்கும் எண்ணம் இல்லை அமைச்சர் அறிவிப்பு. samugammedia  நீர் கட்டணத்திற்கான சூத்திரத்தை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் நேற்று (27) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும், தண்ணீரின் தரத்தைப் பாதுகாக்கவும், செலவைக் குறைக்கவும் அரசு-தனியார் கூட்டாண்மையை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், தண்ணீரை விற்கும் அல்லது தனியார்மயமாக்கும் எண்ணம் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.உத்தேச நீர் கட்டண சூத்திரத்தின் இறுதி வரைவு டிசம்பரில் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகளுக்கு நியாயமான விலையில் தண்ணீர் வழங்கப்படும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement