மின்சாரக் கட்டணங்களுக்கான செலவுச் சீர்திருத்தத்துடன் கூடிய விலைச் சூத்திரத்தை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், உரிய விலைச் சூத்திரத்திற்கான முன்மொழிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த பின்னரே, இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கலந்துரையாடப்பட்டுள்ளது.
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனை இன்று மாலை தனக்கு கிடைத்ததாக பொதுபயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்