• May 02 2024

நீலகிரி மாவட்டத்தில் பதற்றம்- சோதனைக்குட்படுத்தப்பட்ட ராகுல் காந்தியின் ஹெலிகப்டர்..!!

Tamil nila / Apr 15th 2024, 6:26 pm
image

Advertisement

ராகுல் காந்தியின் ஹெலிகப்டர் சோதனைக்குட்படுத்தப்பட்டதனால் அப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதாவது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி பயணித்த ஹெலிகப்டர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் 2வது முறையாக போட்டியிடும் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரங்களுக்காக நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (15) விஜயம் மேற்கொண்டிருந்தார்.

மைசூரிலிருந்து ஹெலிகப்டர் ஊடாக பந்தலூர் தாலுகாவிற்குட்பட்ட தாளூரில் உள்ள தனியார் கல்லூரியொன்றின் மைதானத்தில் தரையிறக்கப்பட்டது.

அந்த இடத்திற்கு சென்ற பறக்கும் படை அதிகாரிகளால் ராகுல் காந்தியின் ஹெலிகப்டர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

சோதனை நிறைவடைந்ததன் பின்னர் அவர் செயின்ட் மேரிஸ் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்துக்கு புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



நீலகிரி மாவட்டத்தில் பதற்றம்- சோதனைக்குட்படுத்தப்பட்ட ராகுல் காந்தியின் ஹெலிகப்டர். ராகுல் காந்தியின் ஹெலிகப்டர் சோதனைக்குட்படுத்தப்பட்டதனால் அப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.அதாவது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி பயணித்த ஹெலிகப்டர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் 2வது முறையாக போட்டியிடும் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரங்களுக்காக நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (15) விஜயம் மேற்கொண்டிருந்தார்.மைசூரிலிருந்து ஹெலிகப்டர் ஊடாக பந்தலூர் தாலுகாவிற்குட்பட்ட தாளூரில் உள்ள தனியார் கல்லூரியொன்றின் மைதானத்தில் தரையிறக்கப்பட்டது.அந்த இடத்திற்கு சென்ற பறக்கும் படை அதிகாரிகளால் ராகுல் காந்தியின் ஹெலிகப்டர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.சோதனை நிறைவடைந்ததன் பின்னர் அவர் செயின்ட் மேரிஸ் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்துக்கு புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement