வடக்கு கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று இரவு முதல் மீண்டும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக,எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் முதல் வெள்ளி வரை வட மாகாணத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.