எமக்கு எதிராக செயற்பட்டால் அரசாங்கத்தை கவிழ்க்கவும் முடியும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுஜன பெரமுனவுக்கு எதிராக செயற்பட்டால் அரசாங்கத்தை கவிழ்க்கவும் முடியும். இதற்காக செய்வதற்கு எங்களுக்கு எத்தனையோ விடயங்கள் உள்ளன.
வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க முடியும். அப்போது நெருக்கடியொன்று ஏற்படும். இவ்வாறாக செய்யக் கூடிய பல விடயங்கள் உள்ளன. அவ்வாறாக செய்யும் எதிர்பார்ப்புகள் எங்களுக்கு கிடையாது. அப்படி செய்வது நாட்டுக்கு பாதிப்பாக அமையும் என்று கூறியுள்ளார்