• May 02 2024

தான் அழகாக இருப்பதற்கு காரணம் கூறிய ரணில்...! அரங்கில் எழுந்த சிரிப்பலை...!

Sharmi / Apr 16th 2024, 11:00 am
image

Advertisement

தான் அழகாக இருப்பதற்கான இரகசியத்தை கூறி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்திய சம்பவம் ஒன்று நேற்றையதினம்(16)  இடம்பெற்றுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

நுவரெலியா மீபிலிமனேயில் இடம்பெற்ற புத்தாண்டு விளையாட்டு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் புத்தாண்டு விழா மைதானத்தில் போட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனாதிபதியின் அருகில் சென்ற அறிவிப்பாளர் “எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு உடனடியாக பதில் அளித்த ஜனாதிபதி, “ஐ.தே.க.வில் இணைந்து நான் அழகாகிவிட்டேன்” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

ஜனாதிபதியிடம் அறிவிப்பாளர் கேட்ட கேள்வியும் அதற்கு கிடைத்த பதில்களும் ஒலிபெருக்கி மூலம் அரங்கம் முழுவதும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு அனைவரையும் சிரிக்க வைத்தது.

அத்துடன் சுற்றுலா காணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்.ஹரின் பெர்னாண்டோவும் ஜனாதிபதியுடன் மீபிலிமனேயில் இடம்பெற்ற புத்தாண்டு விளையாட்டு விழாவை பார்வையிடச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் அழகாக இருப்பதற்கு காரணம் கூறிய ரணில். அரங்கில் எழுந்த சிரிப்பலை. தான் அழகாக இருப்பதற்கான இரகசியத்தை கூறி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்திய சம்பவம் ஒன்று நேற்றையதினம்(16)  இடம்பெற்றுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நுவரெலியா மீபிலிமனேயில் இடம்பெற்ற புத்தாண்டு விளையாட்டு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் புத்தாண்டு விழா மைதானத்தில் போட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனாதிபதியின் அருகில் சென்ற அறிவிப்பாளர் “எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்” என்று கேட்டார். அதற்கு உடனடியாக பதில் அளித்த ஜனாதிபதி, “ஐ.தே.க.வில் இணைந்து நான் அழகாகிவிட்டேன்” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.ஜனாதிபதியிடம் அறிவிப்பாளர் கேட்ட கேள்வியும் அதற்கு கிடைத்த பதில்களும் ஒலிபெருக்கி மூலம் அரங்கம் முழுவதும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு அனைவரையும் சிரிக்க வைத்தது.அத்துடன் சுற்றுலா காணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்.ஹரின் பெர்னாண்டோவும் ஜனாதிபதியுடன் மீபிலிமனேயில் இடம்பெற்ற புத்தாண்டு விளையாட்டு விழாவை பார்வையிடச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement