விபத்து ஏற்பட்டால் விபத்துக்குள்ளானவர்களை உடனடியாக வைத்தியசாலைவைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சையளிப்பது சம்மந்தமான ஒத்திகை நிகழ்வொன்று இன்று புத்தளத்தில் நடைபெற்றது.
புத்தளம் குருநாகல் வீதியின் குட்செட் சந்தியில் வானொன்றும் லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளாவது போன்று நிகழ்த்தப்பட்டது.
இதன்போது விபத்துக்குள்ளானவர்களை உடனடியாக பயணிக்கின்ற வாகனங்களை நிறுத்தி வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது.
குறித்த ஒத்திகை நிகழ்வை புத்தளம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் புத்தளம் ஆதார வைத்தியசாலை ஏற்பாடு செய்தது.
குறித்த ஒத்திகை நிகழ்விற்கு பொலிஸார், இராணுவத்தினர் ஒத்துழைப்பை வழங்கி வெற்றிகரமாக முன்னெடுத்தனர்.