• May 17 2024

இலங்கையில் உணவக ஊழியர்களின் வருமானம் வீழ்ச்சி

Chithra / Dec 26th 2022, 7:59 am
image

Advertisement

இலங்கையில் உணவக ஊழியர்களின் வருமானம் கணிசமாகக் குறைந்து வருகிறது.

விருந்தினர்கள் குறைவான நிலையில் உணவக உரிமையாளர்கள், வீடுகளுக்கு செல்லும் தமது தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது கடினமாக உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உணவக பணியாளர்கள் குறைந்த சம்பளம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற ஒரு யதார்த்தத்தை எதிர்கொள்வதால், அவர்களின் குடும்பங்கள் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றன.

இலங்கை உணவக ஊழியர்கள் குறைவான சேவைக் கட்டணங்களை பெறுகிறார்கள். இதன் விளைவாகவே அவர்கள் மற்ற நாடுகளில் வேலை தேடுகிறார்கள்.

உணவக துறையில் விருந்தினர்கள் வருகையின்மை காரணமாக, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு கூட வருமானம் போதுமானதாக இல்லை என்று உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம். சாந்திகுமார் தெரிவித்தார்.

இந்தநிலையில் அதிகளவானோர் தொழிலை விட்டுச்செல்கின்றனர். இதனையடுத்து உணவகங்களில் ஏற்படும் பணியிடங்களை நிரப்புவதற்காக உணவகங்கள் நாடு முழுவதும் உள்ள உணவக கல்லூரிகளுடன் தொடர்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உணவக துறையினருக்கு உரிய விளம்பர பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனையடுத்து உணவக உரிமையாளார்கள், தங்கள் சொந்த விளம்பர பிரசாரங்களை மேற்கொள்வதில் ஈடுபட்டுள்ளனர்.


தற்போது இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான விருந்தினர்கள் வருகின்றனர். எனினும் அதில் பெரும்பாலானவர்கள் முறைசாரா உணவகங்களில் தங்கிச்செல்கின்றனர் என்று சுற்றுலா நடத்துநர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் மஹேன் காரியவசம் தெரிவித்தார்.

விசா கட்டணங்கள் டிசம்பர் 1 முதல் 30 அமெரிக்க டொலர்களில் இருந்து 50 டாலராக அதிகரிக்கின்றன, வனவிலங்கு பூங்காக்களுக்கான நுழைவு கட்டணம் சுமார் 50 சதவீதம் அதிகரித்துள்ளது,

இது ஏற்கனவே சுற்றுலா பயணிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ள சுற்றுலா நடத்துநர்களுக்கு கூடுதல் சுமையாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்புக்கான விமான டிக்கெட்டுகளின் விலை ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்துள்ளதால், விருந்தினர் வருகையில் மேலும் ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் உணவக ஊழியர்களின் வருமானம் வீழ்ச்சி இலங்கையில் உணவக ஊழியர்களின் வருமானம் கணிசமாகக் குறைந்து வருகிறது.விருந்தினர்கள் குறைவான நிலையில் உணவக உரிமையாளர்கள், வீடுகளுக்கு செல்லும் தமது தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது கடினமாக உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.உணவக பணியாளர்கள் குறைந்த சம்பளம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற ஒரு யதார்த்தத்தை எதிர்கொள்வதால், அவர்களின் குடும்பங்கள் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றன.இலங்கை உணவக ஊழியர்கள் குறைவான சேவைக் கட்டணங்களை பெறுகிறார்கள். இதன் விளைவாகவே அவர்கள் மற்ற நாடுகளில் வேலை தேடுகிறார்கள்.உணவக துறையில் விருந்தினர்கள் வருகையின்மை காரணமாக, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு கூட வருமானம் போதுமானதாக இல்லை என்று உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம். சாந்திகுமார் தெரிவித்தார்.இந்தநிலையில் அதிகளவானோர் தொழிலை விட்டுச்செல்கின்றனர். இதனையடுத்து உணவகங்களில் ஏற்படும் பணியிடங்களை நிரப்புவதற்காக உணவகங்கள் நாடு முழுவதும் உள்ள உணவக கல்லூரிகளுடன் தொடர்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.உணவக துறையினருக்கு உரிய விளம்பர பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனையடுத்து உணவக உரிமையாளார்கள், தங்கள் சொந்த விளம்பர பிரசாரங்களை மேற்கொள்வதில் ஈடுபட்டுள்ளனர்.தற்போது இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான விருந்தினர்கள் வருகின்றனர். எனினும் அதில் பெரும்பாலானவர்கள் முறைசாரா உணவகங்களில் தங்கிச்செல்கின்றனர் என்று சுற்றுலா நடத்துநர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் மஹேன் காரியவசம் தெரிவித்தார்.விசா கட்டணங்கள் டிசம்பர் 1 முதல் 30 அமெரிக்க டொலர்களில் இருந்து 50 டாலராக அதிகரிக்கின்றன, வனவிலங்கு பூங்காக்களுக்கான நுழைவு கட்டணம் சுமார் 50 சதவீதம் அதிகரித்துள்ளது,இது ஏற்கனவே சுற்றுலா பயணிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ள சுற்றுலா நடத்துநர்களுக்கு கூடுதல் சுமையாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.கொழும்புக்கான விமான டிக்கெட்டுகளின் விலை ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்துள்ளதால், விருந்தினர் வருகையில் மேலும் ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement