சனிக்கிழமை உலகக்கிண்ண கால் இறுதி போட்டிகள் இடம்பெற்ற போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாரிய பல மோதல் சம்பவங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Champs-Élysées பகுதியில் இராட்சத திரையில் போட்டிகள் ஒளிபரப்பானபோது ரசிகர்களுக்கிடையே பலத்த மோதல் வெடித்தது.
முதலாவது கால் இறுதியான போர்துகல்-மொராக்கோ அணிகள் மோதிய போட்டியில் போர்துக்கல் அணி 1-0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டி பிரான்ஸ் - பிரித்தானியா அணிகளுக்கு இடையே இடம்பெற்ற நிலையில் போட்டிகளைக் காண 20,000 பேர் வரை Champs-Élysées பகுதியில் குவிந்தனர்.
இந்நிலையில் ரசிகர்களுக்கிடையே மோதல் வெடித்துள்ளது. பொலிஸார் மோதலை தடுக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர். மேலும் இந்த மோதல் சம்பவத்தில் 74 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.
கால்பந்து போட்டியால் பிரான்ஸில் வெடித்த கலவரம் சனிக்கிழமை உலகக்கிண்ண கால் இறுதி போட்டிகள் இடம்பெற்ற போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாரிய பல மோதல் சம்பவங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.Champs-Élysées பகுதியில் இராட்சத திரையில் போட்டிகள் ஒளிபரப்பானபோது ரசிகர்களுக்கிடையே பலத்த மோதல் வெடித்தது.முதலாவது கால் இறுதியான போர்துகல்-மொராக்கோ அணிகள் மோதிய போட்டியில் போர்துக்கல் அணி 1-0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.இரண்டாவது போட்டி பிரான்ஸ் - பிரித்தானியா அணிகளுக்கு இடையே இடம்பெற்ற நிலையில் போட்டிகளைக் காண 20,000 பேர் வரை Champs-Élysées பகுதியில் குவிந்தனர்.இந்நிலையில் ரசிகர்களுக்கிடையே மோதல் வெடித்துள்ளது. பொலிஸார் மோதலை தடுக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர். மேலும் இந்த மோதல் சம்பவத்தில் 74 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.