வவுனியா சின்னத்தம்பனை, மடுக்குளம், வேலன்குளம்,
கந்தன்குளம், புலவநாவூர், ஆகிய கிராமங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள்
பாடசாலைக்கு செல்ல சீரான போக்குவரத்து வசதி இன்மையால் சரியான நேரத்திற்கு
பாடசாலை செல்வதில்லை எனவும் பூவரசங்கும் பாடசாலை அதிபரும், குறித்த கிராம
மக்களும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான
குலசிங்கம் திலீபனிடம் தெரிவித்ததையடுத்தே போக்குவரத்திற்கான தீர்வு
பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த
பிரச்சினையை இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகளிடம் தெரிவித்து
இன்றையதினம் குறித்த கிராமங்களுக்கான போக்குவரத்து சேவையினை மாவட்ட
அபிவிருத்தி குழு தலைவரும், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், வவுனியா சாலை முகாமையாளர் உளுக்குளம் , வடபிராந்திய பாதுகாப்பு முகாமையாளர் சுரேந்தர் இணைந்து ஆரம்பித்து வைத்திருந்தனர்.