ஸ்கொட்லாந்தின் முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் இராஜினாமா செய்யவுள்ளதாக மூத்த அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதன்படி எஸ்.என்.பி தலைவர் எடின்பரோவில் தனது உத்தியோகப்பூர்வ இல்லமான ப்யூட் ஹவுஸில் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் மந்திரி பதவியில் வேறொருவர் பதவியேற்கும் வரை அவர் தொடர்ந்து பதவி வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் பதவியில் இருந்து வெளியேறுவதற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை.
ஸ்டர்ஜன் தனது பதவியை கடந்த 2014 ஆம் ஆண்டு பொறுப்பேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பதவியை இராஜினாமா செய்யும் ஸ்கொட்லாந்தின் முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் SamugamMedia ஸ்கொட்லாந்தின் முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் இராஜினாமா செய்யவுள்ளதாக மூத்த அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது. இதன்படி எஸ்.என்.பி தலைவர் எடின்பரோவில் தனது உத்தியோகப்பூர்வ இல்லமான ப்யூட் ஹவுஸில் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் மந்திரி பதவியில் வேறொருவர் பதவியேற்கும் வரை அவர் தொடர்ந்து பதவி வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பதவியில் இருந்து வெளியேறுவதற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை. ஸ்டர்ஜன் தனது பதவியை கடந்த 2014 ஆம் ஆண்டு பொறுப்பேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.