கொழும்பில் உள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் வாடிக்கையாளர் ஒருவருக்கும் ஊழியர்கள் சிலருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் ஜனவரி 21ம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கலவரத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.