யாழ் வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் சட்டவிரோத மதுபான சாலை ஒன்று இயங்கி வருவதாகவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
யாழில் இன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்போதே அங்கஜன் இராமநாதன் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அங்கஜன் இராமநாதன் மேலும் தெரிவித்துள்ளதாவது
உடுப்பிட்டி மக்கள் வங்கிக்கு அருகில் உள்ள ஒரு வீடு ஒன்றில் சட்டவிரோதமான மதுபானசாலை ஒன்று இயங்கி வருகின்றது.
அதாவது மதுபானசாலைக்கு செல்வோர் பெல் அடித்து உள்ளே சென்று மதுபானத்தை கொள்வனவு செய்ய முடியும். எனவே அதனை கட்டுப்படுத்துமாறு கோரினார்.
இதன்போது குறித்த பிரிவுக்கான பொலிஸ் பொறுப்பதிகாரியினை உடனடியாக குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு குழுத்தலைவரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
யாழில் பெல் அடித்து மதுபானம் விற்பனை. கட்டுப்படுத்துமாறு அங்கஜன் கோரிக்கை.samugammedia யாழ் வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் சட்டவிரோத மதுபான சாலை ஒன்று இயங்கி வருவதாகவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் கோரிக்கை விடுக்கப்பட்டது.யாழில் இன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்போதே அங்கஜன் இராமநாதன் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் அங்கஜன் இராமநாதன் மேலும் தெரிவித்துள்ளதாவதுஉடுப்பிட்டி மக்கள் வங்கிக்கு அருகில் உள்ள ஒரு வீடு ஒன்றில் சட்டவிரோதமான மதுபானசாலை ஒன்று இயங்கி வருகின்றது.அதாவது மதுபானசாலைக்கு செல்வோர் பெல் அடித்து உள்ளே சென்று மதுபானத்தை கொள்வனவு செய்ய முடியும். எனவே அதனை கட்டுப்படுத்துமாறு கோரினார்.இதன்போது குறித்த பிரிவுக்கான பொலிஸ் பொறுப்பதிகாரியினை உடனடியாக குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு குழுத்தலைவரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.