மொனராகலை - பிபில மெதகம பிரதேசத்தில் உள்ள குடிநீர் கிணற்றில் பாம்பு ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தகராறு காரணமாகவே செத்த பாம்பை கிணற்றில் வீசியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்கிணற்றின் மூலம் பிரதேசத்தில் உள்ள 4 குடும்பங்கள் தமது குடிநீருக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி மக்கள் கிணற்றை பார்த்தபோது, பாம்பு ஒன்று கிணற்றில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.