சீனாவின் ஷங்ஹாய் நகருக்குச் சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) சரக்கு விமானம், ஹாங்காங்கில் அவசரமாகத் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சிங்கப்பூரிலிருந்து நேற்றிரவு புறப்பட்ட SQ7858 சரக்கு விமானத்தில், தீ ஏற்பட்டதற்கான எச்சரிக்கை ஒலி எழுந்ததாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த விமானத்தின் விமானி, விமானத்தைச் சோதித்துப் பார்த்த பின்னர் விமானத்தை அதைத் தரையிறக்க முடிவு செய்துள்ளார்.
பின்னர் உள்ளூர் நேரப்படி, இரவு சுமார் 10.50 மணியளவில் ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்பாக விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து நடத்தப்பட்ட புலனாய்வில், விமானத்தில் தீயோ புகையோ மூண்டதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஹாங்காங் விமான நிலைய அதிகாரிகள் விமானத்திற்காக ஓர் ஓடுபாதையை மூடியதாகவும் அங்கு தரையிறங்கவிருந்த 9 விமானங்களை மற்ற ஓடுபாதைகளுக்குத் திருப்பிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தீ பரவும் அபாயம் -ஹாங்காங்கில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SamugamMedia சீனாவின் ஷங்ஹாய் நகருக்குச் சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) சரக்கு விமானம், ஹாங்காங்கில் அவசரமாகத் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூரிலிருந்து நேற்றிரவு புறப்பட்ட SQ7858 சரக்கு விமானத்தில், தீ ஏற்பட்டதற்கான எச்சரிக்கை ஒலி எழுந்ததாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.குறித்த விமானத்தின் விமானி, விமானத்தைச் சோதித்துப் பார்த்த பின்னர் விமானத்தை அதைத் தரையிறக்க முடிவு செய்துள்ளார். பின்னர் உள்ளூர் நேரப்படி, இரவு சுமார் 10.50 மணியளவில் ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்பாக விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.அதை தொடர்ந்து நடத்தப்பட்ட புலனாய்வில், விமானத்தில் தீயோ புகையோ மூண்டதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.ஹாங்காங் விமான நிலைய அதிகாரிகள் விமானத்திற்காக ஓர் ஓடுபாதையை மூடியதாகவும் அங்கு தரையிறங்கவிருந்த 9 விமானங்களை மற்ற ஓடுபாதைகளுக்குத் திருப்பிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.