பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவ பிக்குமார் என சந்தேகிக்கப்படும் சிவில் உடை அணிந்த 6 இளைஞர்கள் மதுபோதையில் கண்டி நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (30) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கண்டி மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இந்த குழுவினரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளனர்.
தாம் பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவ பிக்குகள் என குறித்த குழுவினர் கூறியதாக கண்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவர்கள் தங்காலை, காலி, பிலிமத்தலாவ மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது.
மது போதையில் திரிந்த மாணவ பிக்குமார் அறுவர் சிக்கினர் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவ பிக்குமார் என சந்தேகிக்கப்படும் சிவில் உடை அணிந்த 6 இளைஞர்கள் மதுபோதையில் கண்டி நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று (30) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கண்டி மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இந்த குழுவினரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளனர்.தாம் பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவ பிக்குகள் என குறித்த குழுவினர் கூறியதாக கண்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.அவர்கள் தங்காலை, காலி, பிலிமத்தலாவ மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது.