ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்று பிற்பகல் நடைபெறவிருந்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டம் இரத்துச் செய்யப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சபாநாயகர் கருத்து தெரிவித்த போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
எவ்வாறாயினும், வாத விவாதங்களின் பின்னர், திட்டமிட்டபடி இன்று பிற்பகல் பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்