• Apr 27 2024

யாழில் பரிதாபம்: தேங்காய் விழுந்து ஆணொருவர் உயிரிழப்பு!

Sharmi / Jan 18th 2023, 1:42 pm
image

Advertisement

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் வசித்துவந்த நபர் ஒருவர் தேங்காய் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

சாரதியாக பணிபுரியும் குறித்த நபர் கடந்த 16ம் திகதி  வாகனத்தை நிறுத்திவிட்டு தென்னை மரத்தின் கீழ் படுத்திருந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.

இதன்போது அவரது நெஞ்சுப் பகுதி மீது தேங்காய் விழுந்தது.

அதனையடுத்து அவர் நேற்றையதினம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தவேளை இடையில் உயிரிழந்துள்ளார்.

அராலி மத்தியைச் சேர்ந்த சிவானந்தன் கஜாணன் (வயது 39) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் பிரதேச பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் இறுதிச் சடங்குகள் இன்றையதினம் நடைபெற்றது.


யாழில் பரிதாபம்: தேங்காய் விழுந்து ஆணொருவர் உயிரிழப்பு வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் வசித்துவந்த நபர் ஒருவர் தேங்காய் விழுந்து உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,சாரதியாக பணிபுரியும் குறித்த நபர் கடந்த 16ம் திகதி  வாகனத்தை நிறுத்திவிட்டு தென்னை மரத்தின் கீழ் படுத்திருந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். இதன்போது அவரது நெஞ்சுப் பகுதி மீது தேங்காய் விழுந்தது.அதனையடுத்து அவர் நேற்றையதினம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தவேளை இடையில் உயிரிழந்துள்ளார்.அராலி மத்தியைச் சேர்ந்த சிவானந்தன் கஜாணன் (வயது 39) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் பிரதேச பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் இறுதிச் சடங்குகள் இன்றையதினம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

Advertisement