இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகளில் பொதிகளைக் கொண்டு செல்வோருக்கு புதிய நடைமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளில் , பயணம் செய்கின்ற பிரயாணிகள் தங்களுக்கென்று கொண்டு வருகின்ற பொதிகளுக்கு கட்டணங்கள் அறவிடுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை மூலம் கட்டண விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
100 கிலோமீற்றர் தூரம்,20 கிலோ கிராம் போதியுடன் பயணம் செய்வதற்கு 500 ரூபாய் அறவிடப்படும்.அதற்கு மேல் ஒவ்வொரு கிலோ மீற்றருக்கும் 10 ரூபா வீதம் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.