விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மார்ச் 1ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.
பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்துக் கட்சி செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சந்திப்பின் போது எதிர்வரும் வாரத்திற்கான பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.