• Aug 12 2025

நாடு முழுவதும் விசேட சோதனை; நூற்றுக்கணக்கானோர் கைது

Chithra / Aug 12th 2025, 8:48 am
image

நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 21 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 422 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில், 7,185-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கைகளின் மூலம் 5 சட்டவிரோத துப்பாக்கிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

118 பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து குற்றங்களுக்காக 3,595 பேர் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் விசேட சோதனை; நூற்றுக்கணக்கானோர் கைது நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 21 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 422 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில், 7,185-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இந்த நடவடிக்கைகளின் மூலம் 5 சட்டவிரோத துப்பாக்கிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.118 பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து குற்றங்களுக்காக 3,595 பேர் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement