இன்று (30) சுதந்திர தின ஒத்திகை நடைபெறாது எனவும், அப்பகுதியில் உள்ள வீதிகள் எவையும் மூடப்பட மாட்டாது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
75 ஆவது சுதந்திர தின நிகழ்வையொட்டி விசேட போக்குவரத்து திட்டம் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 4 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த போக்குவரத்து திட்டத்தின்படி காலி முகத்திடலை சுற்றியுள்ள 20 வீதிகள், குறித்த காலப்பகுதியில் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மூடப்படும்.
குறிப்பிட்ட காலப்பகுதியில், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் உத்தரவுகளின் அடிப்படையில் அந்த வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.