நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, நாளைய தினம் முதல் நாடளாவிய ரீதியில் 1,617 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதேநேரம், 16 புதிய தொடரூந்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
12 மலைநாட்டு தொடருந்துகளும், 4 கரையோர தொடருந்து சேவைகளும் முன்னெடுக்கப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.