• Sep 20 2024

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்! பாதுகாப்பு கடமையில் பொலிஸார்..!

Chithra / Dec 30th 2023, 1:52 pm
image

Advertisement

 

கொழும்பு நகரின் 5 காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளைய தினம் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு கோட்டை, கொம்பனித்தெரு, கொள்ளுபிட்டி உள்ளிட்ட 5 காவல்நிலையங்களை உட்படுத்தி இந்த விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தில் கொழும்புக்கு வருகைத் தரும் மக்களின் தொகை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்தப் பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அதற்காக காவல்துறை விசேட அதிரடிப்படையினரின், உதவி கோரப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.


பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் பாதுகாப்பு கடமையில் பொலிஸார்.  கொழும்பு நகரின் 5 காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளைய தினம் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.கொழும்பு கோட்டை, கொம்பனித்தெரு, கொள்ளுபிட்டி உள்ளிட்ட 5 காவல்நிலையங்களை உட்படுத்தி இந்த விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.பண்டிகை காலத்தில் கொழும்புக்கு வருகைத் தரும் மக்களின் தொகை அதிகரித்துள்ளது.இந்த நிலையில், குறித்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், குறித்தப் பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.அதற்காக காவல்துறை விசேட அதிரடிப்படையினரின், உதவி கோரப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement