ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு தற்காலிகமாக நாடாளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த மித்ரபால நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அவசர மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர் முதன் முறையாக இன்றைய தினம் மத்திய செயற்குழு கூடியிருந்தது.
தம்மை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கும் தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி மனுவொன்றை தாக்கல் செய்திருந்த நிலையில், அதனை நீதிமன்றம் நிராகரித்தது.
அத்துடன், பதில் பொதுச்செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்ட சரத் ஏக்கநாயக்க அந்த பதவியில் செயற்படுவதற்கு நீதிமன்றம் தடைப்பிறப்பித்தது.
இவ்வாறான சூழலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய பொதுச்செயலாளர் நியமனம் samugammedia ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு தற்காலிகமாக நாடாளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த மித்ரபால நியமிக்கப்பட்டுள்ளார்.இன்றைய தினம் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அவசர மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர் முதன் முறையாக இன்றைய தினம் மத்திய செயற்குழு கூடியிருந்தது.தம்மை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கும் தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி மனுவொன்றை தாக்கல் செய்திருந்த நிலையில், அதனை நீதிமன்றம் நிராகரித்தது.அத்துடன், பதில் பொதுச்செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்ட சரத் ஏக்கநாயக்க அந்த பதவியில் செயற்படுவதற்கு நீதிமன்றம் தடைப்பிறப்பித்தது.இவ்வாறான சூழலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.