• May 19 2024

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்; பாதுகாக்க நடவடிக்கை! அமைச்சர் அதிரடி SamugamMedia

Chithra / Mar 2nd 2023, 5:22 pm
image

Advertisement

இந்திய மீனவர்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்தில் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தியதாக கூறப்படும் தாக்குதலில் நால்வர் காயமடைந்ததாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த விவகாரம் தொடர்பில், உயர்ஸ்தானிகராலயத்தினூடாக இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சரின் பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தாக்குதல் தொடர்பான விபரங்களை இலங்கை அரசாங்கத்திடம், இந்திய உயர்ஸ்தானிகராலயம் கோரியுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், கலாநிதி ளுஸ்.ஜெய்சங்கர் தமது பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் எவ்வித தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை எனவும் அது முற்றுமுழுதான பொய் குற்றச்சாட்டு எனவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய நேற்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்; பாதுகாக்க நடவடிக்கை அமைச்சர் அதிரடி SamugamMedia இந்திய மீனவர்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்தில் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.தமிழக மீனவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தியதாக கூறப்படும் தாக்குதலில் நால்வர் காயமடைந்ததாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.குறித்த விவகாரம் தொடர்பில், உயர்ஸ்தானிகராலயத்தினூடாக இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சரின் பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் தாக்குதல் தொடர்பான விபரங்களை இலங்கை அரசாங்கத்திடம், இந்திய உயர்ஸ்தானிகராலயம் கோரியுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், கலாநிதி ளுஸ்.ஜெய்சங்கர் தமது பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் எவ்வித தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை எனவும் அது முற்றுமுழுதான பொய் குற்றச்சாட்டு எனவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய நேற்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement