நடுக்கடலில் மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர் படகில் இலங்கை புறா தஞ்சமடைந்தது. அதன் காலில் கட்டப்பட்ட வளையத்தில், சீன எழுத்துக்கள் இருந்ததால், சீனா உளவு பார்க்க அனுப்பியதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த 15ஆம் திகதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த அரசபாண்டி என்பவரது நாட்டுப்படகில், பாம்பனில் இருந்து 13 கிலோமீற்றரில பாக் ஜலசந்தி கடலில் மீனவர்கள் மீன் பிடித்தனர். அப்போது வானில் வட்டமடித்த புறா ஒன்று, திடீரென படகில் தஞ்சமடைந்தது.
இந்த புறாவின் காலில் உள்ள வளையத்தில், இலங்கை யாழ்ப்பாணம் சுதன் மற்றும் மொபைல் போன் எண் 0779432037 என எழுதப்பட்டிருந்தது.
மற்றொரு காலில் சீன எழுத்துக்கள் பொறித்த ஸ்டிக்கர், அதன் கீழே எம்.எப்., 3209 என எழுதப்பட்டிருந்தது.
இந்த புறா, 'ஹோமர்' இனத்தை சேர்ந்த பந்தய புறா எனவும் தொடர்ந்து 300 கிலோமீற்றர் பறக்க கூடியது என ரகு தெரிவித்தார்.
இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை புறா - காலில் சீன எழுத்துக்கள் உளவு பார்க்க அனுப்பப்பட்டதா samugammedia நடுக்கடலில் மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர் படகில் இலங்கை புறா தஞ்சமடைந்தது. அதன் காலில் கட்டப்பட்ட வளையத்தில், சீன எழுத்துக்கள் இருந்ததால், சீனா உளவு பார்க்க அனுப்பியதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.கடந்த 15ஆம் திகதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த அரசபாண்டி என்பவரது நாட்டுப்படகில், பாம்பனில் இருந்து 13 கிலோமீற்றரில பாக் ஜலசந்தி கடலில் மீனவர்கள் மீன் பிடித்தனர். அப்போது வானில் வட்டமடித்த புறா ஒன்று, திடீரென படகில் தஞ்சமடைந்தது.புறாவை மீட்ட மீனவர்கள், ராமேஸ்வரத்தில், 30இற்கும் மேற்பட்ட புறாக்களை வளர்க்கும் மீனவர் ரகுவிடம் கொடுத்தனர்.இந்த புறாவின் காலில் உள்ள வளையத்தில், இலங்கை யாழ்ப்பாணம் சுதன் மற்றும் மொபைல் போன் எண் 0779432037 என எழுதப்பட்டிருந்தது.மற்றொரு காலில் சீன எழுத்துக்கள் பொறித்த ஸ்டிக்கர், அதன் கீழே எம்.எப்., 3209 என எழுதப்பட்டிருந்தது.இந்த புறா, 'ஹோமர்' இனத்தை சேர்ந்த பந்தய புறா எனவும் தொடர்ந்து 300 கிலோமீற்றர் பறக்க கூடியது என ரகு தெரிவித்தார்.