• May 17 2024

உலக பாடசாலை சதுரங்கப்போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற இலங்கை மாணவன்! samugammedia

Chithra / Apr 24th 2023, 8:21 am
image

Advertisement

கிரீஸில் நடைபெற்ற உலக பாடசாலை சதுரங்கப்போட்டியில் 9 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தங்கப்பதக்கத்தை கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தை சேர்ந்த ரித்மிதா தெஹாஸ் கிரிங்கோடா வென்றுள்ளார்.

உலகின் 23 நாடுகளைச் சேர்ந்த 61 பாடசாலையை சேர்ந்த செஸ் வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

இதில் 9 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ரித்மிதா தெஹாஸ் 9 சுற்றுகளில் 7.5 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார்.

இந்த போட்டியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை கஜகஸ்தானின் பாடசாலை வீரர்கள் பெற்றுள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் 9 சுற்றுகளில் இருந்து புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

இந்த போட்டியின் ஆரம்பம் முதல் முன்னணியில் இருந்த ரித்மிதா தெஹாஸ், தன்னை விட அதிக புள்ளிகளை பெற்ற வீரர்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உலக பாடசாலை சதுரங்கப்போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற இலங்கை மாணவன் samugammedia கிரீஸில் நடைபெற்ற உலக பாடசாலை சதுரங்கப்போட்டியில் 9 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தங்கப்பதக்கத்தை கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தை சேர்ந்த ரித்மிதா தெஹாஸ் கிரிங்கோடா வென்றுள்ளார்.உலகின் 23 நாடுகளைச் சேர்ந்த 61 பாடசாலையை சேர்ந்த செஸ் வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.இதில் 9 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ரித்மிதா தெஹாஸ் 9 சுற்றுகளில் 7.5 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார்.இந்த போட்டியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை கஜகஸ்தானின் பாடசாலை வீரர்கள் பெற்றுள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் 9 சுற்றுகளில் இருந்து புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.இந்த போட்டியின் ஆரம்பம் முதல் முன்னணியில் இருந்த ரித்மிதா தெஹாஸ், தன்னை விட அதிக புள்ளிகளை பெற்ற வீரர்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement