• Sep 22 2024

வெளிநாட்டவரின் பணத்தை பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து கொள்ளையிட்ட இலங்கையர்கள்!

Chithra / Jan 18th 2023, 12:27 pm
image

Advertisement

வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு சொந்தமான 6 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹபராதுவ பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர், அவரது மகன் மற்றும் ஹோட்டல் கணக்காளர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோட்டலிலுள்ள பாதுகாப்பு பெட்டகத்தின் இரகசிய இலக்கத்தை முறைக்கேடாக பயன்படுத்தி, இந்த 6 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயம் கொள்ளையிடப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


வெளிநாட்டவரின் பணத்தை பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து கொள்ளையிட்ட இலங்கையர்கள் வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு சொந்தமான 6 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹபராதுவ பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர், அவரது மகன் மற்றும் ஹோட்டல் கணக்காளர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹோட்டலிலுள்ள பாதுகாப்பு பெட்டகத்தின் இரகசிய இலக்கத்தை முறைக்கேடாக பயன்படுத்தி, இந்த 6 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயம் கொள்ளையிடப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement