• May 17 2024

மயிலத்தமடு தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் இறங்கிய கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்..! samugammedia

Chithra / Nov 2nd 2023, 11:44 am
image

Advertisement


மட்டக்களப்பு - மாதவனை, மயிலத்தமடு மேய்ச்சல் தரைகளிலிருந்து விரட்டப்பட்ட  தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கோரியும் ஆதரவு தெரிவித்தும்  கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 

இன்று காலை பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் பேரணியாக பண்ணையாளர்களின் போராட்ட களத்துக்கு சென்று அவர்களுடன் இணைந்து போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும், வாயில்லா ஜீவனை வதைக்க வேண்டாம், எங்கள் மேய்ச்சல் தரைகள் எமக்கே சொந்தம்,  காவி உடை கொண்டு எம்மை நசுக்க வேண்டாம், நிலமே எங்கள் உரிமை, அடக்குமுறையை திணிக்காதே, அத்துமீறிய குடியேற்றம் வேண்டாம், அன்று மனுநீதி சோழனால் கிடைத்த நீதி, இன்று மயிலத்தமடு மக்களுக்கு கிடைக்குமா..? போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாகைளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


மயிலத்தமடு தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் இறங்கிய கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள். samugammedia மட்டக்களப்பு - மாதவனை, மயிலத்தமடு மேய்ச்சல் தரைகளிலிருந்து விரட்டப்பட்ட  தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கோரியும் ஆதரவு தெரிவித்தும்  கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இன்று காலை பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் பேரணியாக பண்ணையாளர்களின் போராட்ட களத்துக்கு சென்று அவர்களுடன் இணைந்து போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.மேலும், வாயில்லா ஜீவனை வதைக்க வேண்டாம், எங்கள் மேய்ச்சல் தரைகள் எமக்கே சொந்தம்,  காவி உடை கொண்டு எம்மை நசுக்க வேண்டாம், நிலமே எங்கள் உரிமை, அடக்குமுறையை திணிக்காதே, அத்துமீறிய குடியேற்றம் வேண்டாம், அன்று மனுநீதி சோழனால் கிடைத்த நீதி, இன்று மயிலத்தமடு மக்களுக்கு கிடைக்குமா. போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாகைளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement