சந்தையில் மரக்கறிகளின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கரட், போஞ்சி, வெண்டிக்காய், கத்திரிக்காய் மற்றும் பாகற்காய் ஆகிய மரக்கறிகளின் 1 கிலோ 600 ரூபாவாக உயரந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் வீழ்ச்சி அடைந்திருந்த மரக்கறிகளின் விலை தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புடலங்காய் தற்போது கிலோ ஒன்று 400 ரூபாவாகவும், பாகற்காய் கிலோ ஒன்று 600 ரூபாவாகவும், பெருஞ்சீரகம் 500 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.