சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட கனமழை காரணமாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள தோப்பூர் - நல்லூர் பிரதான வீதி உடைவடைந்து வெள்ளநீர் பாய்ந்து செல்கின்றது.
இதனால் தோப்பூர் - நல்லூர் வீதியூடாக கனரக வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போர் அசௌகரியங்களுக்கு மத்தியில் பயணித்து வருகின்றனர்.
இந்த மழையுடனான காலநிலை மேலும் தொடருமாக இருந்தால் இன்னும் இவ்வீதி சேதமடைந்து தோப்பூர் - நல்லூர் வீதியுடனான தரைவழிப் போக்குவரத்து பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.