வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் கல்விச் செயலாளரும் ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான சுந்தரம் டிவகலாலா இன்று 12.01.2023 காலமானார்.
மிகவும் கடினமான காலங்களில் தனது ஆளுமைத் திறனால் அற்புதமான சேவையை வடக்குக் கிழக்கு கல்விப் பரப்பில் சிறப்பாக முன்னெடுத்த பெருந்தகை. தீர்மானம் எடுப்பதிலும் அதை நடைமுறைப்படுத்துவதிலும் துணிச்சல் மிக்கவராக இவர் இருந்தமை குறிப்பிடத்தக்கது.