உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகாலுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் குடிநீர் மற்றும் சொத்து வரி செலுத்தக் கோரி தாஜ்மகாலுக்கு ஆக்ரா நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சொத்து வரியும், ஒரு கோடி ரூபாய் குடிநீர் வரியும் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், 15 நாட்களுக்குள் வரி செலுத்தாவிட்டால் தாஜ்மகாலுக்கு சீல் வைத்து மூடப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தாஜ்மகாலுக்கு முதல் முறையாக சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தவறுதலாக அனுப்பப்பட்டு இருக்கலாம் எனவும், இந்திய தொல்லியல் கண்காணிப்பு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் கூட இந்த விடயம் ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இது மோடியின் அரசின் திட்டமிட்ட சதி என்று கூட பலர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
மூடப்படுகிறது தாஜ்மஹால் இனி அது உலக அதிசயம் இல்லையா உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகாலுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் குடிநீர் மற்றும் சொத்து வரி செலுத்தக் கோரி தாஜ்மகாலுக்கு ஆக்ரா நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சொத்து வரியும், ஒரு கோடி ரூபாய் குடிநீர் வரியும் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், 15 நாட்களுக்குள் வரி செலுத்தாவிட்டால் தாஜ்மகாலுக்கு சீல் வைத்து மூடப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், தாஜ்மகாலுக்கு முதல் முறையாக சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தவறுதலாக அனுப்பப்பட்டு இருக்கலாம் எனவும், இந்திய தொல்லியல் கண்காணிப்பு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.இருப்பினும் கூட இந்த விடயம் ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இது மோடியின் அரசின் திட்டமிட்ட சதி என்று கூட பலர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.