பல ஆசைவார்த்தையை கூறி வாக்குப்பெற்று ஆளும் கட்சியில் உள்ளவர்கள் இன்று சொகுசாக வாழும் நிலையில் அவர்களுக்கு வாக்களித்த மக்கள் எதுவும் இல்லாமல் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மண்முனை தென் எருவில் பற்று மகளிர் அணியை அமைப்பதற்கான கூட்டம் மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் களுவாஞ்சிகுடியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் அலுவலகத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி தலைவி க.ரஞ்சினி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சாணக்கியன் என்னும் நபர் இன்று தமிழரசுக்கட்சியில் இருப்பதன் காரணத்தினாலேயே இருக்கு வீதியில் தமிழர்கள் செல்லும் நிலை காணப்படுகின்றது.இல்லாதுவிட்டால் வேறு இனத்தவர்கள் செல்லும் நிலையேற்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி நிர்வாகா உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது தமிழரசுக்கட்சியின் மண்முனை தென் எருவில் பற்று மகளிர் அணி நிர்வாக உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன் மகளிர் அணியின் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
தமிழரசுக்கட்சியில் நான் இருப்பதாலேயே தமிழர்கள் வீதியில் செல்கிறார்கள்- சாணக்கியன் தெரிவிப்பு. பல ஆசைவார்த்தையை கூறி வாக்குப்பெற்று ஆளும் கட்சியில் உள்ளவர்கள் இன்று சொகுசாக வாழும் நிலையில் அவர்களுக்கு வாக்களித்த மக்கள் எதுவும் இல்லாமல் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.இலங்கை தமிழரசுக்கட்சியின் மண்முனை தென் எருவில் பற்று மகளிர் அணியை அமைப்பதற்கான கூட்டம் மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் களுவாஞ்சிகுடியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் அலுவலகத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி தலைவி க.ரஞ்சினி தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சாணக்கியன் என்னும் நபர் இன்று தமிழரசுக்கட்சியில் இருப்பதன் காரணத்தினாலேயே இருக்கு வீதியில் தமிழர்கள் செல்லும் நிலை காணப்படுகின்றது.இல்லாதுவிட்டால் வேறு இனத்தவர்கள் செல்லும் நிலையேற்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.இந்த கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி நிர்வாகா உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.இதன்போது தமிழரசுக்கட்சியின் மண்முனை தென் எருவில் பற்று மகளிர் அணி நிர்வாக உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன் மகளிர் அணியின் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.