• Jul 27 2024

முல்லையில் சிங்கள மீனவர்களின் வாடியை அகற்ற பணிப்பு..!samugammedia

Sharmi / Aug 9th 2023, 2:58 pm
image

Advertisement

முல்லைத்தீவில் அனுமதியின்றி தொழில் செய்வதற்காக பெரும்பான்மையின மீனவர்கள் புதிதாக அமைத்த வாடியினை அகற்றுமாறு அப்பகுதிக்கு சென்ற கிராம சேவையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நாயாற்று பகுதிக்கு தெற்கே உள்ள புலிபாய்ந்தகல் என்ற இடத்தில் சிங்கள மக்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் நேற்றையதினம் (08) கொக்குதொடுவாய் கடற்தொழில் சங்க அங்கத்தவர்கள், நிர்வாகத்தினரும், நாயாறு கடற்தொழில் சங்க நிர்வாகத்தினரும் (செம்மலை கிழக்கு) குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டபோது புதிதாக ஒரு வாடி அமைக்கப்பட்டிருப்பதாக அறிவித்தல் வழங்கப்பட்டமையடுத்து இன்றையதினம் (09.08.2023) குறித்த இடத்திற்கு மீனவர் சங்க உறுப்பினர்களும், கொக்குதொடுவாய் கிழக்கு கிராம அலுவலரும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டிருந்தார்கள்.

குறித்த இடத்திற்கு 18 மேற்பட்ட சிங்கள மீனவர்களும் நான்கு படகுகளுடனும் தொழில் செய்ய வந்திருப்பதும், அரிச்சந்திரன் எனும் பெயரிலையே கடற்தாெழில் திணைக்களத்திற்கு கடிதம் வழங்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த சிங்கள மீனவர்கள் தமக்கு கடற்தாெழில் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டதாக கூறி கடிதத்தை காண்பித்தனர். அக்கடிதத்தில் நான்கு படகிற்கு மீன்பிடிக்கு அனுமதி வழங்ககோரி சிபாரிசு செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளரால், பிரதேச செயலாளருக்கு கடிதம் வழங்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் பிரதேச செயலாளரால் இதுவரை அனுமதி வழங்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டு அவ்விடயத்தினை குறித்த சிங்கள மீனவர்களுக்கு தெளிவுபடுத்தி பிரதேச செயலகத்தில் நீங்கள் அனுமதி பெறவேண்டும் அனுமதி இல்லாததனால் புதிதாக அமைக்கப்பட்ட வாடி அகற்றப்பட வேண்டும் எனவும் கிராம சேவையாளர் கூறியிருந்தார். அது தவறினால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறித்த நபர்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவிக்கையில்,

இவ் விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், நேரில் சென்று பார்வையிட்டதுடன்  மீனவ பிரதிநிதிகள் சிலரிடம், தொழில் செய்யும் எமது மீனவர்களுடனும் கலந்துரையாடிய போது 150 படகுகள் வரையில் குடும்பங்களாக புலிபாய்ந்தகல் பகுதிக்கு வந்து தொழில் செய்ய இருப்பதாகவும் வாடிகள் அமைப்பதற்கான பொருட்கள் குறித்த இடத்திற்கு கொண்டு வந்திருப்பதாகவும், சில நாட்களுக்கு முன்னர் குறித்த இடங்களை பௌத்தபிக்கு ஒருவரும் தனது குழுவினருடனும் வந்து பார்வையிட்டு சென்றதாகவும் இது ஒரு குடியேற்ற முயற்சி என தெரிவித்திருந்தார்.




முல்லையில் சிங்கள மீனவர்களின் வாடியை அகற்ற பணிப்பு.samugammedia முல்லைத்தீவில் அனுமதியின்றி தொழில் செய்வதற்காக பெரும்பான்மையின மீனவர்கள் புதிதாக அமைத்த வாடியினை அகற்றுமாறு அப்பகுதிக்கு சென்ற கிராம சேவையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு நாயாற்று பகுதிக்கு தெற்கே உள்ள புலிபாய்ந்தகல் என்ற இடத்தில் சிங்கள மக்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் நேற்றையதினம் (08) கொக்குதொடுவாய் கடற்தொழில் சங்க அங்கத்தவர்கள், நிர்வாகத்தினரும், நாயாறு கடற்தொழில் சங்க நிர்வாகத்தினரும் (செம்மலை கிழக்கு) குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டபோது புதிதாக ஒரு வாடி அமைக்கப்பட்டிருப்பதாக அறிவித்தல் வழங்கப்பட்டமையடுத்து இன்றையதினம் (09.08.2023) குறித்த இடத்திற்கு மீனவர் சங்க உறுப்பினர்களும், கொக்குதொடுவாய் கிழக்கு கிராம அலுவலரும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டிருந்தார்கள்.குறித்த இடத்திற்கு 18 மேற்பட்ட சிங்கள மீனவர்களும் நான்கு படகுகளுடனும் தொழில் செய்ய வந்திருப்பதும், அரிச்சந்திரன் எனும் பெயரிலையே கடற்தாெழில் திணைக்களத்திற்கு கடிதம் வழங்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த சிங்கள மீனவர்கள் தமக்கு கடற்தாெழில் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டதாக கூறி கடிதத்தை காண்பித்தனர். அக்கடிதத்தில் நான்கு படகிற்கு மீன்பிடிக்கு அனுமதி வழங்ககோரி சிபாரிசு செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் உதவி பணிப்பாளரால், பிரதேச செயலாளருக்கு கடிதம் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் பிரதேச செயலாளரால் இதுவரை அனுமதி வழங்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டு அவ்விடயத்தினை குறித்த சிங்கள மீனவர்களுக்கு தெளிவுபடுத்தி பிரதேச செயலகத்தில் நீங்கள் அனுமதி பெறவேண்டும் அனுமதி இல்லாததனால் புதிதாக அமைக்கப்பட்ட வாடி அகற்றப்பட வேண்டும் எனவும் கிராம சேவையாளர் கூறியிருந்தார். அது தவறினால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறித்த நபர்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவிக்கையில், இவ் விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், நேரில் சென்று பார்வையிட்டதுடன்  மீனவ பிரதிநிதிகள் சிலரிடம், தொழில் செய்யும் எமது மீனவர்களுடனும் கலந்துரையாடிய போது 150 படகுகள் வரையில் குடும்பங்களாக புலிபாய்ந்தகல் பகுதிக்கு வந்து தொழில் செய்ய இருப்பதாகவும் வாடிகள் அமைப்பதற்கான பொருட்கள் குறித்த இடத்திற்கு கொண்டு வந்திருப்பதாகவும், சில நாட்களுக்கு முன்னர் குறித்த இடங்களை பௌத்தபிக்கு ஒருவரும் தனது குழுவினருடனும் வந்து பார்வையிட்டு சென்றதாகவும் இது ஒரு குடியேற்ற முயற்சி என தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement