தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு வீட்டின் முன்பாக சற்றுமுன் பெருமளவு பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை தேரர் தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழுவொன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்பாக விரைவதாக தகவல் கிடைத்துள்ள நிலையிலேயே அப்பகுதியில் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.