முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் கிராமத்தில் கத்தியை காட்டி கொள்ளையடிக்க முற்பட்ட திருடர்களை மக்கள் பிடித்துள்ளார்கள்.
இந்த சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது.
சுதந்திரபுரம் பகுதியில் பெண் ஒருவர் சிறிய கடையொன்றை நடத்திவரும் நிலையில், குறித்த கடைக்கு சென்ற கொள்ளையர்கள் கத்தியை காட்டி அந்த பெண்ணிடம் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முற்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த கொள்ளையர்கள் கிராம மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு கட்டிவைத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் சென்று திருடர்களை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த திருடர்கள் வசிப்பிடம் தொடர்பில் முன்னுக்கு பின் முரணான இடங்களை சொல்லி வந்த நிலையில் ஒருவரின் அடையாள அட்டையில் கிளிநொச்சி முறிப்பு என முகவரி காணப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
தமிழர் பகுதியில் பரபரப்பு. கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முற்பட்ட இருவரை மடிக்கி பிடித்த மக்கள் samugammedia முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் கிராமத்தில் கத்தியை காட்டி கொள்ளையடிக்க முற்பட்ட திருடர்களை மக்கள் பிடித்துள்ளார்கள்.இந்த சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது.சுதந்திரபுரம் பகுதியில் பெண் ஒருவர் சிறிய கடையொன்றை நடத்திவரும் நிலையில், குறித்த கடைக்கு சென்ற கொள்ளையர்கள் கத்தியை காட்டி அந்த பெண்ணிடம் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முற்பட்டுள்ளனர்.இதன்போது குறித்த கொள்ளையர்கள் கிராம மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு கட்டிவைத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் சென்று திருடர்களை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.குறித்த திருடர்கள் வசிப்பிடம் தொடர்பில் முன்னுக்கு பின் முரணான இடங்களை சொல்லி வந்த நிலையில் ஒருவரின் அடையாள அட்டையில் கிளிநொச்சி முறிப்பு என முகவரி காணப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.