இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 62 ரூபாவினால் விலையை அதிகரித்துள்ள சிலோன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றில் இருந்து 61 சதம் இலாபத்தை எதிர்பார்த்துள்ளதாகவும், அரசாங்கம் ஒரு லீற்றருக்கு 103.64 ரூபாய் வரி அறவிடுவதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றருக்கு 104.02 ரூபாயும், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றருக்கு 126.71 ரூபாவாகவும், டீசல் லீற்றருக்கு 80.15 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் லீற்றருக்கு 3.02 ரூபாயும் வரி அறவிடுகின்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
லங்கா இந்தியன் ஒயில் (ஐஓசி) மற்றும் சினோபாக் ஆகிய இரண்டும் பெற்றோல் மற்றும் டீசல் ஆகிய நான்கு வகைகளிலும் நஷ்டத்துக்கே முகங்கொடுக்கின்றது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலை அதிகரிப்பால் அரசாங்கத்துக்கு கிடைக்கும் இலாபம். அமைச்சர் வெளியிட்ட தகவல் samugammedia இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 62 ரூபாவினால் விலையை அதிகரித்துள்ள சிலோன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றில் இருந்து 61 சதம் இலாபத்தை எதிர்பார்த்துள்ளதாகவும், அரசாங்கம் ஒரு லீற்றருக்கு 103.64 ரூபாய் வரி அறவிடுவதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றருக்கு 01 சதம், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றருக்கு 39 சதம், டீசல் லீற்றருக்கு 51 சதம், மண்ணெண்ணெய் லீற்றருக்கு 15 சதம் இலாபத்தை ஈட்டுகின்றது.ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றருக்கு 104.02 ரூபாயும், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றருக்கு 126.71 ரூபாவாகவும், டீசல் லீற்றருக்கு 80.15 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் லீற்றருக்கு 3.02 ரூபாயும் வரி அறவிடுகின்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.லங்கா இந்தியன் ஒயில் (ஐஓசி) மற்றும் சினோபாக் ஆகிய இரண்டும் பெற்றோல் மற்றும் டீசல் ஆகிய நான்கு வகைகளிலும் நஷ்டத்துக்கே முகங்கொடுக்கின்றது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.