என் வாழ்க்கையின் 8-வது அதிசயம் எனது மனைவி தான் என ரவீந்தர் சந்திரசேகரன் தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.
சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கியவர் மகாலட்சுமி. 90’ஸ் கிட்ஸ் பலரின் கிரஷ்ஷாக வலம் வந்த இவர், பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இவருக்கு அனில் என்பவருடன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர்.
பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததையடுத்து, ரவீந்தருக்கும் இது இரண்டாவது திருமணமாக அமைந்தது.
திருமணத்துக்குப் பிறகு இருவரும் தங்கள் காதலை அடிக்கடி இன்ஸ்டகிராமில் படம் வெளியிட்டு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் புதிய படமொன்றை வெளியிட்ட ரவீந்தர், “என் வாழ்க்கையின் 8-வது அதிசயம் எனது மனைவி” எனப் பதிவிட்டுள்ளார்.
அதற்கு, “யார் என்ன சொன்னாலும், என் இதயம் துடிக்கும் வரை நான் உன்னை நேசிப்பேன். நீ இல்லாமல் நான் இல்லை... நீ தான் என் எல்லாம்” என பதிலளித்திருக்கிறார் மகாலட்சுமி.
8வது அதிசயம் என் மனைவி. மகாலட்சுமிக்கு ரவீந்தரின் ரொமாண்டிக் போஸ்ட் என் வாழ்க்கையின் 8-வது அதிசயம் எனது மனைவி தான் என ரவீந்தர் சந்திரசேகரன் தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கியவர் மகாலட்சுமி. 90’ஸ் கிட்ஸ் பலரின் கிரஷ்ஷாக வலம் வந்த இவர், பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.இவருக்கு அனில் என்பவருடன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர்.பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததையடுத்து, ரவீந்தருக்கும் இது இரண்டாவது திருமணமாக அமைந்தது.திருமணத்துக்குப் பிறகு இருவரும் தங்கள் காதலை அடிக்கடி இன்ஸ்டகிராமில் படம் வெளியிட்டு தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் புதிய படமொன்றை வெளியிட்ட ரவீந்தர், “என் வாழ்க்கையின் 8-வது அதிசயம் எனது மனைவி” எனப் பதிவிட்டுள்ளார்.அதற்கு, “யார் என்ன சொன்னாலும், என் இதயம் துடிக்கும் வரை நான் உன்னை நேசிப்பேன். நீ இல்லாமல் நான் இல்லை. நீ தான் என் எல்லாம்” என பதிலளித்திருக்கிறார் மகாலட்சுமி.