• May 22 2024

அரசாங்கத்துடன் ஒன்றிணைவதே எதிர்க்கட்சிக்கு சிறந்த வழி - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு! samugammedia

Tamil nila / Nov 26th 2023, 10:49 pm
image

Advertisement

அரசாங்கத்துடன் ஒன்றிணைவதே எதிர்க்கட்சி அதிகாரத்தைப் பெறுவதற்கான சிறந்த வழி என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்ட பிராந்திய அரசியல் அதிகார சபையுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் அடுத்த தேர்தலில் அரசாங்க அதிகாரத்தை பெற முயற்சிக்கலாம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாடு எங்களுக்காக அல்ல எதிர்கால சந்ததியினருக்காக கட்டியெழுப்பப்படுகிறது என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சிகள் தங்களைப் பற்றி மாத்திரமே சிந்திக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியின் போது எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்திருந்தால் சில மாதங்களுக்கு முன்னர் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றியிருக்க முடியும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் ஒன்றிணைவதே எதிர்க்கட்சிக்கு சிறந்த வழி - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு samugammedia அரசாங்கத்துடன் ஒன்றிணைவதே எதிர்க்கட்சி அதிகாரத்தைப் பெறுவதற்கான சிறந்த வழி என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.மாத்தளை மாவட்ட பிராந்திய அரசியல் அதிகார சபையுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் அடுத்த தேர்தலில் அரசாங்க அதிகாரத்தை பெற முயற்சிக்கலாம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.நாடு எங்களுக்காக அல்ல எதிர்கால சந்ததியினருக்காக கட்டியெழுப்பப்படுகிறது என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சிகள் தங்களைப் பற்றி மாத்திரமே சிந்திக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.பொருளாதார நெருக்கடியின் போது எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்திருந்தால் சில மாதங்களுக்கு முன்னர் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றியிருக்க முடியும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement