• May 04 2024

திருமணமாகி கணவன் வீட்டிற்கு புறப்பட்ட மணப்பெண்:பிரிய மறுத்த வளர்ப்பு நாயின் பாசப்போராட்டம்!SamugamMedia

Sharmi / Feb 13th 2023, 12:36 pm
image

Advertisement

இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த சித்திரை திரு மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுயம்பு செல்வன். இவரது மகள் சுகப்பிரியா வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். சுகப்பிரியாவின் திருமணம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இந்நிலையில் திருமணம் நடைபெற்று முடிந்த அன்று மணமகன் வீட்டிற்கு சுகப்பிரியா புறப்பட்டபோது,  வீட்டில் அவர் வளர்த்த நாய் இடைவிடாமல் குரைக்க தொடங்கியது. சுகப்பிரியாவை விடாமல் முன் கால்களால் பற்றி கொண்டு அங்குமிங்கும் ஓடியது. நீண்ட நேரம் வளர்ப்பு நாயின் பாசப் போராட்டத்தை பார்த்து திருமணத்துக்கு வந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த பாசப்போராட்டம், அங்கு திரண்டிருந்த உறவினர்களின் கண்களையும் குளமாக்கியது.

இதுகுறித்து மணப்பெண்ணின் உறவினர்கள் கூறுகையில்,

"கல்லூரி மற்றும் வெளியிடங்களுக்கு சுகப்பிரியா சென்றால் அவர் வருகையை எதிர்பார்த்து வளர்ப்பு நாய் காத்திருக்கும். அவரது இருசக்கர வாகனத்தின் சத்தம் கேட்டதும் கட்டி வைக்கப்பட்ட நிலையிலும் நாய் அங்கும் இங்கும் ஓடி தனது வாலை ஆட்டி பாசத்தை வெளிப்படுத்தும்" என கூறினர்.

வளர்ப்பு நாயுக்கும், மணப்பெண்ணுக்கும் இடையே நடந்த பாசப்போராட்டத்தை சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.






திருமணமாகி கணவன் வீட்டிற்கு புறப்பட்ட மணப்பெண்:பிரிய மறுத்த வளர்ப்பு நாயின் பாசப்போராட்டம்SamugamMedia இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த சித்திரை திரு மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுயம்பு செல்வன். இவரது மகள் சுகப்பிரியா வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். சுகப்பிரியாவின் திருமணம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.இந்நிலையில் திருமணம் நடைபெற்று முடிந்த அன்று மணமகன் வீட்டிற்கு சுகப்பிரியா புறப்பட்டபோது,  வீட்டில் அவர் வளர்த்த நாய் இடைவிடாமல் குரைக்க தொடங்கியது. சுகப்பிரியாவை விடாமல் முன் கால்களால் பற்றி கொண்டு அங்குமிங்கும் ஓடியது. நீண்ட நேரம் வளர்ப்பு நாயின் பாசப் போராட்டத்தை பார்த்து திருமணத்துக்கு வந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.இந்த பாசப்போராட்டம், அங்கு திரண்டிருந்த உறவினர்களின் கண்களையும் குளமாக்கியது. இதுகுறித்து மணப்பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், "கல்லூரி மற்றும் வெளியிடங்களுக்கு சுகப்பிரியா சென்றால் அவர் வருகையை எதிர்பார்த்து வளர்ப்பு நாய் காத்திருக்கும். அவரது இருசக்கர வாகனத்தின் சத்தம் கேட்டதும் கட்டி வைக்கப்பட்ட நிலையிலும் நாய் அங்கும் இங்கும் ஓடி தனது வாலை ஆட்டி பாசத்தை வெளிப்படுத்தும்" என கூறினர். வளர்ப்பு நாயுக்கும், மணப்பெண்ணுக்கும் இடையே நடந்த பாசப்போராட்டத்தை சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.மணப்பெண்ணை பிரிய மறுத்து கண்ணீர் விட்ட வளர்ப்பு நாய் #nagercoil #Dog #petlovers pic.twitter.com/SAh4nMhvd6— A1 (@Rukmang30340218) February 12, 2023

Advertisement

Advertisement

Advertisement