• May 06 2024

திருமலையில் முன் பகையால் அரங்கேறிய கொடூரம்...! குடும்பஸ்தர் படுகொலை..!

Sharmi / Apr 3rd 2024, 3:42 pm
image

Advertisement

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று (02)  இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் ஈச்சிலம்பற்று -இலங்கைத்துறை பகுதியைச் சேர்ந்த 35 வயமுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முன் பகையினை தீர்ப்பதற்காக குறித்த நபரின் வீட்டுக்குச் சென்ற சிலரே கூரிய ஆயுதங்களால் இத்தாக்குதலை மேற்கொண்டு , கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.

அதேவேளை, குறித்த சம்பவம்  தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

திருமலையில் முன் பகையால் அரங்கேறிய கொடூரம். குடும்பஸ்தர் படுகொலை. திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த நபரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.நேற்று (02)  இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் ஈச்சிலம்பற்று -இலங்கைத்துறை பகுதியைச் சேர்ந்த 35 வயமுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.முன் பகையினை தீர்ப்பதற்காக குறித்த நபரின் வீட்டுக்குச் சென்ற சிலரே கூரிய ஆயுதங்களால் இத்தாக்குதலை மேற்கொண்டு , கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.அதேவேளை, குறித்த சம்பவம்  தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement