கடந்த ஏழு மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 19 வீதத்தால் இலங்கைக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலகளாவிய ஊக்குவிப்பு சர்வதேச நிறுவனம் (Global Promotion International Institute) தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் காரணமாக கணிசமான அளவு அந்நிய செலாவணியை உள்வாங்க முடிந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பணம், சுற்றுலா வருமானம் போன்றவற்றின் அதிகரிப்பு காரணமாக, இறக்குமதி தடையை தளர்த்துவதன் மூலம் அந்நிய செலாவணி மீதான அழுத்தம் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.