தொலைபேசியின் சார்ஜரை வாயில் வைத்து கடித்த 8 மாத குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியா-கர்நாடகா மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம், கார்வாரை சேர்ந்தவர் தம்பதிக்கு சானித்யா என்ற 8 மாத குழந்தை இருந்தது. இந்நிலையில், மனைவி வீட்டில் செல்போனுக்கு சார்ஜர் போட்டு விட்டு ஸ்விட்ச் ஒஃப் (OFF) செய்யாமல் வைத்திருந்துள்ளார்.
அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சார்ஜர் வயரைக் கடித்துள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து குழந்தை தூக்கி வீசப்பட்டுள்ளது.
இதனால் பதறிப்போன பெற்றோர், குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு ஸ்விட்ச் ஒஃப் செய்யாமல் சென்றதால் அதில் மின்சாரம் பாய்ந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
செல்போன் சார்ஜர் வயரைக் கடித்த குழந்தை. பரிதாபமாக உயிரிழப்பு.samugammedia தொலைபேசியின் சார்ஜரை வாயில் வைத்து கடித்த 8 மாத குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியா-கர்நாடகா மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம், கார்வாரை சேர்ந்தவர் தம்பதிக்கு சானித்யா என்ற 8 மாத குழந்தை இருந்தது. இந்நிலையில், மனைவி வீட்டில் செல்போனுக்கு சார்ஜர் போட்டு விட்டு ஸ்விட்ச் ஒஃப் (OFF) செய்யாமல் வைத்திருந்துள்ளார்.அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சார்ஜர் வயரைக் கடித்துள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து குழந்தை தூக்கி வீசப்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன பெற்றோர், குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு ஸ்விட்ச் ஒஃப் செய்யாமல் சென்றதால் அதில் மின்சாரம் பாய்ந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.