சிறுவர் வைத்தியசாலைகளில் தடுப்பூசி மயக்க மருந்து எந்தச் சந்தர்ப்பத்திலும் குழந்தைகளுக்கு வழங்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறுவர் வைத்தியசாலைகளில் மயக்க மருந்து பயன்படுத்தப்பட மாட்டாது.அவை பெரியவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
எனவே குழந்தை உயிரிழக்க தடுப்பூசி மயக்க மருந்து காரணமாக இருக்காது.
வைத்தியசாலைக்கு ஒரு மருந்து கொண்டு வர முன்பு ஒன்பது மாதங்கள் பரிசோதனைக்கு உற்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.